அநுரகுமாரவை ஆதரிக்க 15 பாராளுமன்ற உறுப்பினா்கள் தயாா் – பேச்சுக்கள் இடம்பெறுவதாக தகவல்

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை ஏற்கும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 எம்.பிக்கள் இவ்வாறாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வெளியில் இருந்து அமைக்கப்படும் குழுக்களின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவை ஆதரிப்பது தொடர்பில் குறித்த எம்.பிக்கள் குழு திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் வகையில் பல்வேறு சிவில் மற்றும் அரசியல் குழுக்களை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.