அன்புவழிபுரத்தில் நூலக நடமாடும் சேவை

திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக நடமாடும் சேவை திருகோணமலை அன்புவழிபுரம் நூலக மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் நேற்று (21) இடம் பெற்றது.

நிகழ்வில் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என் . பரமேஸ்வரன் , நூலகர் மு.லெ. றிம்சான , அன்பு சனசமூக நிலையத்தின் பொறுப்பாளர்கள் , நூலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
 நடமாடும் சேவையில் நூலக கண்காட்சியும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.