அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான Honduras (ஹோண்டுராஸ்) நாட்டு குடியேறிகள் கவுதமாலா, மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவில் தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
குடியேறிகளின் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டை வீசியும் கவுதமாலா பாதுகாப்பு படையினர் இவர்களது தஞ்சம் கோரும் பயணத்தைத் தடுக்க முயற்சித்திருக்கிறது.
“இது போன்ற பெரும் சட்டவிரோத மக்கள் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிராந்திய சிக்கலைக் கவனிக்கும் விதமாகவே அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம்,” என கவுதமாலா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.