ஆவா குழு தலைவர் கொழும்பில் கைது – வெளிநாடு செல்லவிருந்த நிலையில் பொலிஸ் அதிரடி

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் வெளிநாடு தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில், கொழும்பு – கல்கிசை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.