இந்தியா சென்றடைந்தார் ரணில் – விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

delhi 1 இந்தியா சென்றடைந்தார் ரணில் - விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லி சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி பயணமாகினர்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று இரவு 7.15 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.