இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கருடன் அனுரகுமார பேச்சு

GFjjBu6a0AApNve இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கருடன் அனுரகுமார பேச்சுதேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று புதுடில்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

டாக்டர் ஜெய்சங்கர் எக்ஸ் இல் வெளியிட்ட செய்தியில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து பேசினோம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினோம்” என்று தெரிவித்துள்ளாா்.