இன்று உயிா்த ஞாயிறு – தேவாலயங்கள் அனைத்துக்கும் விஷேட பாதுகாப்பு

31 இன்று உயிா்த ஞாயிறு - தேவாலயங்கள் அனைத்துக்கும் விஷேட பாதுகாப்பு
நாடலாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.