மேலும் முஸ்லிம் மக்களைப் பழிவாங்கி இழிவுபடுத்தி ஒடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு தீர்மானமே கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம் ஜனாசாக்களைப் புதைக்கும் முட்டாள்தனமான முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இது போரினால் தொழில்களை இழந்து இடம்பெயர்ந்து கடும் பாதிப்படைந்த சிறிய நிலப்பரப்புடைய இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார தொழில் முயற்சிகள், இயல்பு வாழ்வு என்பனவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலாகும்.
அத்துடன் இஸ்லாமிய மக்கள் எவரும் வசிக்காத இரணைதீவில் கொரோனாவால் இறந்த இஸ்லாமிய மக்களின் ஜனசாக்களைப் புதைக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் புரிந்துணர்வு, ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்கச் சூழ்ச்சியுமாகும்.