இராணுவ வாகனம் மோதியதில் 23 வயதான இளம்பெண் மரணம் – யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்

97 இராணுவ வாகனம் மோதியதில் 23 வயதான இளம்பெண் மரணம் - யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்தசுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதி உயிரிழந்துள்ளார். அவரது பிறந்த தினமான இன்றைய தினம் கட்டுப்பாடின்றி வந்த இராணுவ வாகனம் மோதித் தள்ளியதில் அவா் பரிதாபமாகப் பலியானாா்.

வீதியைக் கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, அவர் நின்ற கரைக்கு மறுபுறமாக- எதிர்த்திசையில் புத்தூர்ச் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் ஒன்று வேகமாக வந்து, வீதியின் வலது கரையில் நின்ற யுவதியை அடித்து, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதிக் விழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த யுவதி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை காரணமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதாக
அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மரணமடைந்த யுவதியின் பிறந்தநாள் இன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றது.