இலங்கைக் கடல் எல்லையில் எதிர்வரும் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன என யாழ்.மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
நேற்றையதினம் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளோம். இதனைம் தடுத்து நிறுத்துமாறு தொடர்ச்சியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வந்தமையுடன் பல்வேறு போராட்டங்களையும் நடாத்தியுள்ளோம்.
ஆனாலும் உரிய தீர்வு கிடைக்காத நிலையே உள்ளது. இந் நிலையில் எமக்கான தீர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையே முன்னுடுக்க தீர்மானித்துள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.