இந்தியாவை சேர்ந்த 8 கடற்படை அதிகாரிகளுக்கு கட்டார் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. டாரா குளோபல் ரெக்னோலொஜி என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்தமாக கட்டார் குற்றம் சுமத்தியுள்ளது.
கட்டாரின் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பான தகவல்களை திருடி இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.