ஈரான் அதிபரின் மரணம் – இலங்கையில் இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமையை தேசிய துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 9 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

முன்னதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்து உமா ஓயா பல் நோக்கு திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.