ஈரான் அதிபரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல்

98 ஈரான் அதிபரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல்ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி ஆகியோரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவா் தனது அதிகாரபுா்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு குறிப்பில், அவர்களின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டு ஜனாதிபதியை இழந்து வாடும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பலநோக்குத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக
கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.