அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில் தாயகத்திலும் பன்னாடுகளிலும் பேரணிகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஆதரவுடன் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைமையில் சென்னையில் உள்ள ஜ.நா. அலுவலகத்தில் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர் தலைமையில் தமிழக உணர்வாளர்கள் ஜ.நா அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடு கோரிக்கை மனுவையும் கையளித்துள்ளனனர்.