ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,
“திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கொரோனா மையத்தில் ஐந்து நாட்கள் வைத்திருந்து மீண்டும் முகாமிலேயே கொண்டுவந்து விட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு இப்போது உடல் நிலை மிக மோசமாக உள்ளது.மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்”இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.