உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் குறித்து மேற்குலக நாடுகளும், ஊடகங்களும் கவனம் செலுத்தாமல் உள்ளது அதிருப்தியளிக்கிறது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்காக இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் போரிடுவது குறித்து மேற்குலக நாடு ஒன்று கவலை வெளியிட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர், ரஷ்யாவுக்காக போரிடும் இலங்கையர்கள் குறித்து மாத்திரம் மேற்குலகம் கவனம் செலுத்துகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் ரஷ்ய அதிகாரிகளும் இந்த விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.