உங்களுக்கு யாரின் ஆதரவு தேவை? ரணிலிடம் நிமல் லான்சா அணி கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவினை பெறுவதா அல்லது எமது ஆதரவை பெறுவதா என்பதை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும் என்று நிமல் லான்சா அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சனிக்கிழமை வெளியான சிங்கள வார ஏடு ஒன்றுக்கு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தனித்து இயங்கும் நிமல் லான்ச அணியின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது:

அரச தலைவர் தேர்தல் வழி நடத்தல் குழுவுக்கு எமது அணியின் கடும் எதிர்ப்பையும் மீறி பொதுஜன பெரமுனவின் நிறுவனரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவை தொடர்ந்து அழைத்தால் எதிர்காலத்தில் எமது அணி சுயாதீனமாக இயங்க வேண்டி வரும்.

நிமல் லான்சா அணியும் நிமல் சிறிபால டி சில்வா அணியும் இணைந்து செயற்படுவதால் எதிர்காலத்தில் கூட்டாக எமது கருத்தை முன்வைப்போம் என்று சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.