பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ள தாக தீபச்செல்வன் குறிப்பிட்டார்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவரின் புத்தக வெளியீட்டை நடத்தியமைக்காக கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தீவிர
விசாரணைக்கு தாம் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அண்மையில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தின் பாடல்கள் தீபச்செல்வனால் எழுதப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.