ஐக்கிய மக்கள் சக்தி அரசிலும் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருக்கும் – ஜெய்சங்கரிடம் தெரிவித்த சஜித்

9 3 ஐக்கிய மக்கள் சக்தி அரசிலும் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருக்கும் - ஜெய்சங்கரிடம் தெரிவித்த சஜித்இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மற்றும் ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் நட்புறவு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் அவ்வாறே பேணப்படும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும், சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஸ்மார்ட் கல்வியையும், புதிய உலகிற்கு ஏற்ற கல்விக் கொள்கையையும் உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

8 3 ஐக்கிய மக்கள் சக்தி அரசிலும் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருக்கும் - ஜெய்சங்கரிடம் தெரிவித்த சஜித்அத்துடன், மீண்டும் ஒருமுறை இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், எரான் விக்கிரமரத்ன, பழனி திகாம்பரம், ரவூப் ஹகீம், நிரோஷன் பெரேரா மற்றும் வீ இராதாகிருஷ்ணன் ஆகியபாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.