ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு

d1 ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வுஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

“ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் மானிப்பாய் தென்மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் மே தின நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கருத்துரைகள் என்பன இடம்பெற்றன. ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

d2 ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வுஇந்த நிகழ்வில் புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சின் தலைவர் வேந்தன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.