கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீது ஜூலை 2, 3 ஆம் திகதிகளில் விவாதம் – 3 ஆம் திகதி வாக்கெடுப்பு

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இரண்டு நாள் விவாதத்தின் இறுதியில் ஜூலை 3-ஆம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.