கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

IMG 20240523 WA0036 கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லைதிருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20240523 WA0034 கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லைஇச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் இன்று வரை கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20240523 WA0035 கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லைகுறித்த மீனவர்களை தேடி சல்லி பிரதேச மீனவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்களை தேடி சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.