திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ஈச்ச நகரில் காட்டு யானை தங்களது பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. இதில் பயன் தரும் வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல மரங்களை யானைகள் துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இக் காட்டு யானை தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேலைகளில் தூக்கத்தின் போது வருவதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதம் விளைவித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுமார் 15 க்கும் மேற்பட்ட தென்னை வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இச் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் இக் காட்டு யானையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.