காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று போராட்டம்

6 2 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று போராட்டம்கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்தனர்.

இந்த போராட்டமானது இன்று காலை கண்டி வீதியில் உள்ள கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் அவர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி தேவை என்று அவா்கள் கேரிக்கையை முன்வைத்தாா்கள். நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் தெரிவித்தாா்கள்.

பொது வேட்பாளராக சரியான ஒருவர் நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்தார்.