கொரோனா தொற்றினால் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் வசித்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான லோகநாதன் என்ற நபர் உயிரிழந்துள்ளார். ஆவார் இவரின் குடும்பத்தினர் புங்குடு தீவில் வசித்து வருகின்றனர். இவர் நீரிழிவு நோய் உள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர் உணவகம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.
மேலும் பிரான்சில் வசித்து வரும் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த 32 வயதான குணரத்தினம் கீர்த்திகன் என்பவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் தாவடி வேம்படி முருகமூர்த்தி கோவிலடியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இவரின் மனைவி கர்ப்பிணிப் பெண்ணாவார்.
14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(26) மரணமடைந்துள்ளார். இவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டார்கள்.