முன்னாள் பாதுகாப்புச் செயலரும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபயா ராஜபக்ஸவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று(22) காலையில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஐ.நா. அமைதிப்படை வரவேண்டும். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று, கோத்தபயாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோத்தபயாவை கைது செய் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்து, கோட்டா ஒரு உயிர் கொல்லி, எமது பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை ஆகிய கோசங்களை எழுப்பியிருந்தனர்.