சம்பந்தனின் இறுதிக் கிரியைகளில் அண்ணாமலை பங்கேற்பாா்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி இறுதிக் கிரியையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ள நிலையில், அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி மூலம்
உறுதிசெய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறீதரன் தெரிவித்தார்.