சம்பந்தனின் பூதவுடல் இன்று திருமலை கொண்டு செல்லப்படுகிறது – அவரது இல்லத்தில் அஞ்சலி

4 சம்பந்தனின் பூதவுடல் இன்று திருமலை கொண்டு செல்லப்படுகிறது - அவரது இல்லத்தில் அஞ்சலிஇரா.சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இறுதி அஞ்சலி நிறைவின் பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

“சம்பந்தனின் பூதவுடல் நேற்று காலை மார்டின் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அஞ்சலிக் காக வைக்கப்பட்டு தொடர்ந்து தந்தை செல்வா அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது. இந்தநிலையில், இராஜவரோதயம் சம்பந்தனது
புகழுடல் இன்று காலை 6 மணியளவில் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு 9.30 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்படும்.

இதைனையடுத்து ஞாயிற்றுகிழமை அன்னாரது இல்லத்தில் மதியம் இறுதிகிரியை இடம்பெற்று உடல் தகனம் செய்யப்படும்.இதேவேளை, பெருந் தலைவர் சம்பந்தன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக விசேடபோக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அஞ்சலியில் கலந்து கொள்பவர்கள் இது குறித்து மேலதிக விவரங்களை பெற்று கொள்ளலாம்.