சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரின் இரங்கல் செய்தியில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாருக்கும் எனக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புக்கள் இனிய நினைவுகளாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க அவர் பாடுபட்டார்.

அன்னாரின் மறைவு இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்களுக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் பாரிய இழப்பாகும் என பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளாா்.