சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி பேச்சுவார்த்தைக்காக 5நாள் விடுமுறையில் கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு சென்றிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடமையை பொறுப்பேற்க வருகை தரவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரிக்கு வருவதாக
அறிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து ஆயிரக்கணக்கான மக்கள் வைத்தியசாலை முன்பாக திரண்டு போராடிய நிலையில் மீண்டும் வருவேன் என வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றிருந்த நிலையில், தான் இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடமையை பொறுப்பேற்க வரவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் அறிவித்துள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.