ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு – உயா் நீதிமன்றில் தாக்கல்

வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில், உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.