ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட எமது கட்சியில் யாரும் இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நன்றியுள்ள ஒரு நபராக அவரது வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்தவுள்ளேன். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடு வதற்குப் பொருத்தமான நபர் எமது கட்சியில் இல்லை” என்று தெரிவித்தாா்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நன்றியுள்ள ஒரு நபராக அவரது வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்” என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தாா்.