ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தமிழர்களுக்கு ஏமாற்றம்; செல்வம் அடைக்கலநாதன்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெளத்த மதத்திற்கும், புத்த சாசனத்திற்கும், சிங்கள மக்களுக்கும் கூடுதலான சலுகைகளை அவர் பேசியமை போன்று தங்களுக்கு தென்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 19 ஆவது திருத்த சட்டத்தை ஒழிக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலே ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியினுடைய சிந்தனையை வைத்துப்பார்க் கின்ற போது, இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களினுடைய வாழ்க்கை என்பது கேள் விக்குறியான ஒரு விடயமாகத்தான் அமையப்போகின்றது என்பது தெரிகின்றது” என்றார்.