ஜனாதிபதி வேட்பாளா் தொடா்பில் இன்னும் தீா்மானிக்கவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ஷ தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.