தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க தனது ஜப்பான் விஜயத்திற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் பங்கேற்கின்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இவ்வாறு சென்றுள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஜப்பான் Tsukuba வின் Yatabe Citizen Hall இல் அந்நாட்டில் வசிக்கின்ற இலங்கையர் முன் உரைநிகழ்த்துகின்ற மக்கள் சந்திப்பு நடைபெறுவதோடு எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஜப்பானில் இருக்கின்ற தொழில்முயற்சியாளர்களின் சந்திப்பொன்றும் நடாத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் ஜப்பானின் உயர்மட்ட ராஜதந்திர சந்திப்புகள் சிலவற்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.