இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர்.
இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.