தமிழகத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் வெற்றியிட்டிய யாழ்ப்பாணத்து சிறுமி

தமிழகத்தில் சீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாழ்ப்பாணம், அரியாலையை சேர்ந்த கில்மிசா உதயசீலன் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று(17) நேரு உள்விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மலையகத்தை சேர்ந்த அஷானி என்பவரும் பங்குபற்றியிருந்தார். இறுதிப்போட்டியில் கில்மிசா தெரிவாகியபோதும், அஷானி வாழ்ப்பை இழந்திருந்தார்.

பல சுற்றுக்களில் கலந்துகொண்ட இருவரும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஆதரவுகளையும் பெற்றிருந்தனர். இறுதிப் போட்டியில் ஆறு பேர் பங்குபற்றியபோதும், கில்மிசா தனது இசைத் திறமையால் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அவருக்கு 10 இலட்சம் ரூபாய்கள் பரிசுத் தொகையைக வழங்கப்பட்டுள்ளது.

kilmisha தமிழகத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் வெற்றியிட்டிய யாழ்ப்பாணத்து சிறுமி