அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் நடந்திருக்கிறது.
இப்போராட்டம் Perth, Canberra, Sydney, Adelaide, Brisbane, Melbourne, Darwin, Hobart, Newcastle, Biloela ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.
“இது ஒரு குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்ல. இது அகதிகள் மோசமாக நடத்துப்படுவதை முடிவுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவதற்கான போராட்டம்,” எனக் கூறியுள்ளார் அகதிகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பின் Rachael Jacobs.