தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 100க்கும் குறையாத மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள்.