திருகோணமலையில் மான்களின் உணவிற்கான விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

திருகோணமலையில் மான்களுக்கான இயற்கை உணவை வழங்கும் நோக்குடனும், சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காகவும், மான்களுக்கான மருத்துவ செலவு, மான் பூங்கா அழகுபடுத்தும் நோக்குடனும் மான்களுக்கான உணவு விற்பனை நிலையம் திருகோணமலை மான் பூங்காவில் (06) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் . செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர்  ஏ.பி.மதனவாசன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் வி.ராஜசேகர் அவர்களது ஆதரவோடு Trinco Aid நிறுவனத்தினால் Lion Club of Trincomalee Town, Lion Club of Centennial Paradise ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் இவ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர் திரு. ஏ.பி.மதனவாசன் அவர்கள், திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் திரு. வி.ராஜசேகர் அவர்கள், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன் அவர்கள், திட்ட ஆலோசகர் திரு. அனுஜன் அவர்கள், நிகழ்ச்சி முகாமையாளர் திரு ச.நவநீதன் அவர்கள், Mr. Lion M M Jaladeen (Lion Club), Mr. Lion S Gobinath (Lion Club), Mr. Lion Floyd Barthelot (Lion Club) அவர்களும், மற்றும் Lion Club உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், தன்னார்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.