திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி  தலைமையில் இன்று (13) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் காலங்களில் பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், மாவட்டத்தில் கடந்த காலங்களில் டெங்கு பரவிய விதம்,டெங்குவை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மழைக்காலம் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து வாராந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பது பற்றியும் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில்  மேலதிக  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.