திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன்

IMG 20240530 WA0017 1 திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன்திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இலங்கை நிர்வாக சேவை தரம் i ஐ சேர்ந்த உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.