திருமலை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் இடம் பெற்றது. விளையாட்டு திணைக்களம் ஊடாக நடாத்தப்பட்ட குறித்த போட்டியானது நேற்று இடம் பெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச அணி மெய்வல்லுனர் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது. மேலும் உதைப் பந்தாட்டம்,கரப்பந்து ஆகிய போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை தம்பலகாமம் பிரதேச அணி முடிசூடியது. இதில் தங்கப் பதக்கம் 05,வெள்ளிப் பதக்கங்கள் 06,வெண்கலப் பதக்கங்கள் 03 உட்பட ஆறாவது தடவையாகவும் மெய்வல்லுனர் போட்டியில் சம்பியனாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியனாக முடிசூடினர்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்குதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் குறித்த விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.
குறித்த போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மாகாண விளையாட்டு பணிப்பாளர் யு.சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.