தேசிய அரசாங்கம் அமைப்பதை ஏற்கமுடியாது – சஜித் அணி தீா்மானம்

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.