தேர்தல் காச்சல் – இனப்பிரச்னை தொடர்பில் ரணில் அதிக அக்கறையாம்

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியும், இனப்பிரச்சனைக்கான தீர்வுமே தம் முன்னுள்ள மிகப்பெரும் இரு சவால்கள் என இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை(27) பதுளை முஸ்லீம் மத்திய கல்லூரியில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

இதனை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைத்து செயற்படுவதற்கு வெளிப்படையான கோரிக்கையையும் அவர் அங்கு முன்வைத்திருந்தார்.

எல்லா மக்களுக்கும் தான் பாதுகாவலனாக இருக்கப்போவதாகவும், இனநல்லிணக்கப்பாடு ஏற்பட பாடுபடப்போவதாகவும், அதற்கான செயற்திட்டம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.