தோ்தல் ஆணைக்குழுவை ஐ.தே.க. சந்தித்தது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சந்திப்பின் உண்மைத்தன்மை எதிர்வரும் நாட்களில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஒரே அமைச்சரவையைச் சேர்ந்த இருவர் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் தேர்தலாக அமையும் என்றும், இதில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜேதாச போட்டியிடுவார் என்பதுடன், தற்போதைய ஜனாதிபதியும் போட்டியிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.