நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடக்கவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் எனில் முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என எழுப்பட்ட கேள்விக்கு, “முதலில் பொதுத்தேர்தல் நடந்தால் இந்த கேள்வி எழாது” ஏன நாமல் பதிலளித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, “ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் நிறைவேற்குழு மற்றும் அரசியல் குழுவே முடிவை எடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்க தயார்” என்று பதிலளித்தார் நாமல்.