தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளார்.
அம்பாறை – சம்மாந்துறை காவல்துறையினரால் நேற்றைய தினம் (27) சனிக்கிழமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளருமான பா.அரியநேத்திரனுக்கு சம்மாந்துறை காவல்துறையினரால் விசாரணை அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.
சம்மாந்துறை காவல்துறையினரால் விசாரணைக்குவருமாரு கொக்கட்டிச்சோலை காவல்துறை ஊடாக அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் அனுமதிப்பத்திரங்களுடன் காவல்துறை நிலையத்திற்கு வருமாறு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்ததாக முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.