நாளை யாழ். வருகிறார் ரணில் – காணி கையளிப்பில் பங்கேற்பாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருக்கிறார்.

யாழ். வரும் அவர், பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம் மீளகையளிக்கவுள்ளார்.

பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்போருக்கான காணி உறுதியையும் வழங்குவார்.