நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றும் 25 இந்திய மீனவா்கள் கைது

8 நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றும் 25 இந்திய மீனவா்கள் கைதுயாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை ஊடாக மயிலிட்டியில் வைத்து யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி 25 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.